சினேகன் நட்சத்திரப் பயணம் 🌌02🌌

அண்ணா அரச மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னர் இவர் எழுதிய கவிதை வைத்து பார்த்து இவர் நண்பர்களே இவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இவர் 5 வருடங்கள் வைரமுத்துக்கு உதவியாக இருந்தார். பின் சில மனக்கசப்பால் அவரை விட்டு விலகி தனியாக பாடல் எழுதினார்.

இவர் கவிஞர், எழுத்தாளர் ,பாடலாசிரியர் , நடிகர், சமூக சிந்தனையாளர் ,பேச்சாளர் என பல துறைகளில் தனது திறமை வெளிப்படுத்தியுள்ளார் . அத்துடன் சினேகம் என்ற அமைப்பினை உருவாக்கி பல சேவைகள் செய்துள்ளார். அத்துடன் வெள்ளூர் தமிழ் சங்கத்தின் ஆலோசகர் . இவர்  மூன்று வருடங்கள் “ இளந்தென்றல்” என்ற மாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.


இவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்திரன் அவர்கள் மூலமாக திரைப்பட பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

கருத்துகள்