அஜித் நடிப்பின் அசாத்திய திறமை வெளிப்படுத்திய படம் "வாலி" எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் சிம்பிரனுடன் இணைந்து இரட்டை வேடத்தில் நடித்த படம் இது. இதில் வாய் பேச முடியாத எதிர் மறை பாத்திரத்தில் தனது முக பாவனையில் அதை வெளிப்படுத்தி பலராலும் பராட்டப்பட்ட பாத்திரமாகவே இன்று வரை திகழ்கின்றது இப்படி ஒரு பாத்திரத்தை ஏற்று நடிப்பது இன்று வரை முடியாத காரியமாகவே உள்ளது பிற நடிகர்களுக்கு
அஜித் கார்த்திக் மற்றும் மீனா நடிப்பில் வெளிவந்த "ஆனந்த பூங்காற்றே" இப்படத்தில் உள்ள வித்தியாசமான காதல் கதையும் அந்த காதல் வெல்ல மாறுபட்ட வகையில் துடிக்கும் இளைஞனாக பொறுமையுடன் போராடும் குணமும் அஜித்தின் பாத்திரத்தை மிக சிறப்பிக்க கூடியதாக அமைந்தது
அஜித்தின் "அமர்க்களம் " தமிழ் சினிமாவையே அமர்களப்படுத்திய படம் இது வரை சாதுவாகவும் குறும்பான காதலனாகவும் மட்டுமே நடித்த அஜித்தை அதிரடி நாயகனாக அறிமுகம் படுத்திய படம். இப்படஇப்படம் அஜித் திரைவாழ்கையை மட்டும் அல்ல சொந்த வாழ்க்கையும் அமர்க்களப்படுத்திய படம். இப்படத்தில் நாயகியாக நடித்த ஷாலினி இன்று நிஜய வாழ்க்கை நாயகியாக உள்ளார். இப்படத்தில் நடிக்கும் போது அஜித் ஷாலினிக்கு இடையில் காதல் ஏற்பட்டது இக்காதல் திருமணத்தில் முடிந்தது இன்று ஊர் போற்றும் ஜோடியாகவே வாழ்கின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக