உறவுகளின் எதிர்பார்ப்பு

எமக்கு இந்த உலகத்தில்  பல உறவுமுறைகள் உள்ளது. ஒவ்வொரு உறவுகளும் ஒவ்வொரு விதமானவை அந்த உறவுகளிடம்  இருந்து நாம் ஏதோ எதிர்பார்க்கிறோம் அவர்களும் ஏதோ எதிர்பார்க்கிறார்கள். இவற்றை புரிந்து கொண்டால்  வாழ்க்கை அழகாக மாறி விடும்.
அம்மா, அப்பா  ஒரு பிள்ளையிடம் எதிர்பார்ப்பது பாசம், மதிப்பு, இறுதி காலத்துனை பிள்ளைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது பாசம்,  அரவனைப்பு,  எமது பிரச்சினைகளின் தீர்வு நண்பர்கள்  எமது  வாழ்க்கையின் நல்லது கெட்டத்தை கூறுபவனாக இருக்கும் வேண்டும். காதலன் காதலி  அல்லது கணவன் மனைவி  என் வாழ்க்கையை உன்னிடம் அர்ப்பணிக்கிறேன்  நீ எனக்காகவே வாழ வேண்டும் .ஒர் ஆசிரியர் மாணவர்களிடம் நற்பண்பு ,மதிப்பு, சிறந்த மாணவன் என்ற பெயர் மாணவன்  ஆசிரியரிடம் கல்வி முதலாளி ஊழியரிடம் எதிர்பார்ப்பது நல்ல வேலையை உழியர் முதலாளிடம் சம்பளத்தை  இவ்வாறு ஒவ்வொரு வரும் ஏதோ ஒரு காரணத்துடனே  வாழ்கின்றனர்

அதன் அடிப்படையில் அவர்களின் தேவைகளை புரிந்து நடக்க வேண்டும். எவ்விடத்தில் புரிந்துனர்பு அற்றுப்போகிறதோ அவ்விடத்தில்  பிரச்சினை  உருவாகின்றது.

எந்த உறவாக இருந்தாலும் ஒரு நிமிடம் நன்கு யோசித்தால் எங்களுக்கு அவரிடம் என்ன தேவையுண்டு  அவருக்கு  என்னிடம் என்ன தேவையுண்டு என்று யோசித்தால் அவர்களை நன்கு புரிந்து கொள்ளலாம். பின் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் பிரச்சினை உருவாவதற்கான வாய்ப்பு குறையும்  அத்துடன் ஒருவர் எமக்கு உதவி செய்கின்றார் ஆனால் அவருக்கு எந்த பயனும் இல்லை என்றால் நிச்சயம் அவரால்  எமக்கு  ஏதோ ஒரு பிரச்சினை  ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

எனவே எமது வாழ்க்கையில் உள்ள உறவுகளிடம் நாம் எதிர்பார்ப்பவையும் அவர்கள்  எம்மிடம் எதிர்பார்ப்பது  அறிந்து அது சரியானவையா இல்லை தவறானவையா என்று அறிந்து  எமது  உறவுகளை பாதுகாப்போம்.

கருத்துகள்